சிங்கம்புணரி காளியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2026 11:03
சிங்கம்புணரி; சிங்கம்புணரி உப்புச்செட்டியார் தெரு காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா தொடங்கியது. மார்ச் 24ஆம் தேதி இரவு பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மார்ச் 31 ஆம் தேதி பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக பால்குடம், முளைப்பாரி, தீச்சட்டி, எடுத்து வந்தும், பெண்கள் மாவிளக்கு எடுத்தும் வழிபாடு நடத்துகின்றனர். ஏப். 1 இல் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது. ஏப். 2ல் கரகம், தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து பூஞ்சோலை செல்லும் நிகழ்வு நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை உப்புச்செட்டியார் உறவின் முறையாளர்கள் செய்துவருகின்றனர்.