பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.
பழநி கோயிலில் பங்குனி உத்திர விழா திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் மார்ச் 26ல் காலை கொடியேற்றம் நடந்தது. விழா நாட்களில் வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கடா, தங்கமயில், யானை, தங்க குதிரை, வெள்ளி பிடாரிமயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு விழா நாட்களில் நடந்தது.
திருக்கல்யாணம்: பங்குனி உத்திர திருவிழாவில் முக்கிய நிகழ்வான வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி மார்ச் 31,ல் திருஆவினன்குடி கோயில் முன்புறம் நடந்ததது. இரவு வெள்ளி தேரோட்டம் சன்னதிவீதி, கிரி வீதிகளில் நடந்தது.
தேரோட்டம்: இன்று (ஏப்.1ல்) மதியம் சுவாமி தேரில் எழுந்தருளினார். மாலை 4:38 மணிக்கு பங்குனி உத்திர திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் கிரி வீதிகளில் பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" கோஷத்துடன் உடன் தேரோட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, பழநி, இந்தியன் வங்கி கிளை மேலாளர் விக்னேஷ் வேலாயுதன், பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏப்.,4 அன்று இரவு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடையும். மேலும் பழநி கிரிவிதி குடமுழுக்கு விழா அரங்கத்தில் பங்குனி உத்திர கலை நிகழ்ச்சிகள் நடந்தது.