கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2026 10:04
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் வருடம் தோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ள நிலையில் இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த மார்ச்.23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் சுவாமிகள் குதிரை, காளை, பூப்பல்லாக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார்.நேற்று பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு காலை ஏராளமான பக்தர்கள் பால்குடங்கள்,காவடிகள், பறவை காவடிகள் எடுத்து சுவாமியை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து மாலை 4:30 மணிக்கு தேரில் சுவாமி எழுந்தருளியவுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை நான்கு ரத வீதிகளின் வழியே இழுத்து வந்தனர். தேர் நிலையை அடைந்தவுடன் தீபாராதனை நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டிக்குளம் கிராமத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.