முள்ளிப்பாடி ஆற்றில் இறங்கிய வடமதுரை சவுந்தரராஜ பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2026 10:04
வடமதுரை: பங்குனி திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் வீதி உலா வந்த வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் முள்ளிப்பாடி ஆற்றில் இறங்கினார்.
வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் பங்குனி மாதத்தில் திண்டுக்கல் நகரில் பல்வேறு திருக்கண்களில் எழுந்தருள்வது பங்குனி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. நேற்று முன்தினம் துவங்கிய விழாவையொட்டி வடமதுரையில் இருந்து பல்லக்கில் புறப்பட்ட சுவாமி முள்ளிப்பாடியில் இரவு தங்கினார். நேற்று காலை சந்தனவர்த்தினி ஆற்றில் இறங்கி ராமதேவ மகரிஷிக்கு வரமளித்தார். இதை தொடர்ந்து திண்டுக்கல் சென்ற சுவாமிக்கு நாகல் நகர் விஸ்வ பிராமண வாலிப சங்கத்தினரால் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏப். 7 வரை நகரின் பல்வேறு பகுதிகளில் குதிரை, கருட, புஷ்ப பல்லக்கு வாகனங்களில் சுவாமி எழுந்தருள ஏப். 8ல் வடமதுரை திரும்புகிறார்.