திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் சுபத்திரை திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2026 11:04
திருத்தணி: திரவுதியம்மன் கோவிலில் நடந்து வரும் தீமிதி விழாவில் இன்று நடந்த சுபத்திரை அம்மன் திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் வழிபட்டனர். திருத்தணி காந்திநகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் மகா பாரத சொற்பொழிவும், இரவு உற்சவர் அம்மன் திருவீதியுலா நடந்து வருகிறது. இதுதவிர, இரவில் மகா பாரத நாடகமும் நடக்கிறது. இந்நிலையில், உற்சவர் அர்ஜூனன் – சுபத்திரை அம்மனுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.