Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரிதான 11ம் நுாற்றாண்டு உரல் ... தலை மொட்டைக்காக ஆண்டாண்டு காலம் காத்திருக்கும் ஊர் மக்கள்: மதுரையில் ஒரு வினோத கிராமம் தலை மொட்டைக்காக ஆண்டாண்டு காலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

13 ஏப்
2026
12:04

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பெரிய கோயிலுக்கு வந்து செல்கின்றனர். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, சித்திரை பெருவிழா என பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மாதம் 6-ந்தேதி  நடைபெற்றது. 


இந்த நிலையில் சித்திரை பெருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று ( திங்கள்கிழமை ) காலை  நடைபெற்றது. முன்னதாக பஞ்சமூர்த்திகளுடன் சந்திரசேகரர் கோவிலுக்குள் புறப்பாடாகி கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது, இதையடுத்து  பிரமாண்ட கொடிமரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்தி கோஷத்தின் நடுவே மங்கல வாத்தியம் முழங்க  கொடி ஏற்றப்பட்டது. 

இந்த விழாவில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


விழாவில் இன்று மாலை 6.30 மணி அளவில் பஞ்சமூர்த்திகள் படி சட்டத்தில் புறப்பாடு நடைபெறுகிறது . விழா நாட்களில் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து விழா நாட்களில் நாள்தோறும் பல்லக்கிலும், சிம்மம், மேஷம், வெள்ளி மயில், சந்திர பிரபை, முத்துப்பல்லக்கு, பூதம், வெள்ளி யானை உள்பட பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 27-ந்தேதி காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் நடைபெறுகிறது. தேரானது நான்கு ராஜவீதிகளில் வலம் வர உள்ளது. மேலும் அன்றைய நாளில் அதிகாலை 5 மணிக்குள் முத்து மணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. விழாவில் 18-ம் நாளான 30-ந்தேதி தியாகராஜர் ருத்திரபாத தரிசனத்துடன் யதாஸ்தான பிரவேசம், தொடர்ந்து மதியம் நடராஜர் நான்கு ராஜவீதி புறப்பாடு சிவகங்கை குளத்தில் தீர்த்த வாரி நடைபெறுகிறது. மாலையில் கொடியிறக்கத்துடன் சித்திரை பெருவிழா  நிறைவு அடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யகார உற்சவம் இன்று திங்களன்று வெகு சிறப்பாகத் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar