திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யகார உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2026 11:04
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யகார உற்சவம் இன்று திங்களன்று வெகு சிறப்பாகத் தொடங்கியது. இவ்விழா 19 நாட்களுக்கு நடைபெற உள்ளது. ஏப்ரல் 22ழம் தேதியன்று ஸ்ரீ பாஷ்யகார சாத்துமுறை வைபவம் நடைபெறும். பகவத் ராமானுஜர், விசிஷ்டாத்வைத தத்துவக் கோட்பாடுகளின் அடிப்படையில், ஸ்ரீ பாஷ்யம் எனும் விளக்கவுரையை இயற்றினார். இதன் காரணமாகவே அவர் பாஷ்யகாரர் எனப் போற்றப்பட்டார். ஸ்ரீ ராமானுஜரின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தைக் குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீ பாஷ்யகார சாத்துமுறை வைபவம் கொண்டாடப்பட்டு வருகிறது. பாஷ்யகார உற்சவத்தின் முதல் நாளான இன்று திங்களன்று காலை, ஏழுமலையான் கோவிலில் தங்கப் பல்லக்கில் (திருச்சி) எழுந்தருளச் செய்யப்பட்டு, கோவிலைச் சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளிலும் திருவீதி உலா நடைபெற்றது. இவ்வைபவத்தின் போது, ஜீயர்கள் திவ்ய பிரபந்தப் பாடல்களைப் பாராயணம் செய்தனர். விழாவில் திருப்பதி ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயர் சுவாமி, திருப்பதி ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமி மற்றும் கோவில் அதிகாரிகள் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.