Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி ... புஷ்ப விமானத்தில் திருவொற்றியூர் வட்டப்பாறையம்மன் மாடவீதி உலா புஷ்ப விமானத்தில் திருவொற்றியூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மே 1 அதிகாலை வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்:
எழுத்தின் அளவு:
மே 1 அதிகாலை வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2026
04:04

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் திருக்கோலத்தில் பெருமாள் வைகை ஆற்றில் இறங்க உள்ளார்.


பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. கோயிலில் மதுரை அழகர் கோயிலுக்கு இணையாக ஆண்டுதோறும் அனைத்து வைபவங்களும் நடக்கிறது. இந்த ஆண்டு கோடைத்திருநாள் எனும் சித்திரைத் திருவிழா ஏப்., 26 காலை 9:30 மணிக்கு காப்பு கட்டுதலுடன் ஆரம்பம் ஆகிறது. அன்று தொடங்கி தினமும் யாகசாலை பூஜைகள் மற்றும் இரவு பெருமாள் ஆடி வீதி வலம் வந்து தீபாராதனைகள் நடக்கும். ஏப்., 30 காலை 9:00 மணிக்கு கும்பத் திருமஞ்சனம் நடக்கிறது. அன்று நள்ளிரவு 2:00 மணிக்கு மேல் பெருமாள் கோடாரி கொண்டையிட்டு, ஈட்டி, வளரி, கத்தி, கேடயம், தடி ஏந்தி தங்க நெல்மணி தோரணங்கள் சூடி, பூ பல்லக்கில் மே 1 அதிகாலை 4:00 மணிக்கு வைகை ஆற்றில் இறங்க உள்ளார். 


அன்று காலை 9:30 மணிக்கு அழகர் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி ஆயிரக்கணக்கான பக்தர்கள் துருத்தி எனும் பீச்சாங்குழல் மூலம் பெருமாளை மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்து வரவேற்கும் நிகழ்வு நடக்கிறது. மே 2 மண்டூக மகரிஷி சாப விமோசனம் அளித்து, தசாவதார திருக்கோலம் காண்கிறார். மே 3 கருட வாகனம், மே 4 ராஜாங்க திருக்கோலம் பூண்டு வைகையில் வலம் வருகிறார். மே 5 காலை மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூ பல்லக்கில் நகர் வலம் வந்து மாலை 6:00 மணிக்கு திருக்கோயிலை அடைவார். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar