Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோத்தகிரி ஆஞ்சநேயர் கோவிலில் ...  பழநி முருகன் கோயிலில் மூன்று மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் பழநி முருகன் கோயிலில் மூன்று மணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் சித்திரைத் திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
 பரமக்குடியில் சித்திரைத் திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

26 ஏப்
2026
03:04

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய நிலையில், மே 1 அதிகாலை அழகர் ஆற்றில் இறங்குகிறார்.

பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இன்று காலை 10:00 மணிக்கு பெருமாளுக்கு காப்பு கட்டப்பட்டது.  பின்னர் தீர்த்த குடங்கள் புறப்பாடாகி யாக சாலையை அடைந்தது. தினமும் காலை, மாலை யாக பூஜைகள் நடக்கும். மேலும் ஏப்., 29 வரை இரவு 7:00 மணிக்கு தினமும் பெருமாள் ஆடி வீதியில் வலம் வருவார். ஏப்., 30 காலை யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகிய காலை 9:00 மணிக்கு பெருமாள் மற்றும் கருப்பணசாமிக்கு கும்ப திருமஞ்சனம் நடக்கிறது. அன்று இரவு 2:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் எழுந்தருளுவார். தொடர்ந்து மே 1 அதிகாலை 4:00 மணிக்கு ஏராளமான தீவட்டிகள் வெளிச்சத்தில் மேளதாளம் முழங்க வைகை ஆற்றில் இறங்குகிறார். பின்னர் 6:00 மணிக்கு தல்லாகுளத்தில் சேர்க்கையாவார். அன்று காலை 9:30 மணிக்கு அழகர் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நீர் பீய்ச்சி அழகரை வரவேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி இரவு வண்டியூர் எனும் காக்கா தோப்பு மண்டபத்தில் சேர்க்கை ஆகிறார். மே 2 மாலை சேஷ வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்து இரவு விடிய விடிய தசாவதார சேவையில் அருள் பாலிக்க உள்ளார். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar