நீலகிரி மாவட்டம், காத்தாடி மட்டம் அருகே தென்றல் நகரில் அமைந்துள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில் 19-ம் ஆண்டு திருவிழா கடந்த 23 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 24ல் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. அம்மனுக்கு சீர்வரிசை எடுத்தல், ஆற்றங்கரையில் அம்மன் குடியழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அம்மன் கரகம், பறவைக்காவடி, பால்குடம் உற்சவர் ஊர்வலம் அக்னி காவடி எடுத்தல் நடநத்து. அன்னதானம் வழங்கப்பட்டது. சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு இளம்தென்றல் நேரு இளைஞர் நற்பணி சங்கத்தின் சார்பில் வானவேடிக்கை நடந்தது. இன்று மாவிளக்கு பூஜை, அம்மன் கரகம் ஊர்வலம்,மஞ்சள் நீராட்டு விழா, கரகம் குடிவிடுதல் நிகழ்ச்சிகளுடன் திருவிழா நிறைவடைந்தது. விழாவில் காத்தாடி மட்டம், பரமூலை, பூஞ்சோலை, இந்திரா நகர், பாலகொலா, முதுகுலா, மீக்கேரி, கொடலட்டி, மகாலிங்கம் நகர், தேவர்சோலை கிராம தலைவர்கள், பொது மக்கள் பங்கேற்றனர் விழா ஏற்பாடுகளை, இளந்தென்றல் நேரு இளைஞர் நற்பணி மன்றம், ஊர் பொதுமக்கள், கோவில் கமிட்டி மற்றும் தென்றல் நகர் அனைத்து மகளிர் சுய உதவி குழுவினர் இணைந்து செய்தனர்.