மாடக் கோட்டை முனீஸ்வரர் கோயில் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2026 01:05
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, சாத்தமங்கலம், மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் வைகாசி விழா, மே 15 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் மூலவருக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. விழாவின் தொடர்ச்சியாக மே 21 ல், பூச்செரிதல் விழா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக முக்கிய விழாவான பூக்குழி விழா நடைபெற்றது. இதில் விரதம் இருந்த பக்தர்கள் சாத்தமங்கலம் விநாயகர் கோயிலில் இருந்து, காவடி, பால்குடம் எடுத்து பக்தர்கள் கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். அதன் தொடர்ச்சியாக இரவில் பொங்கல் வைக்கப்பட்டு, நள்ளிரவில், மூலவருக்கு நள்ளிரவு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் கோயில் டிரஸ்டி கருப்பத்தேவர், சென்னை பெருநகர மாநகராட்சி கணக்கு மற்றும் நிதி குழு தலைவர் தனசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.