பதிவு செய்த நாள்
26
ஜூன்
2026
10:06
நெகமம்; சின்னேரிபாளையம், மதுரைவீரன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
நெகமம், சின்னேரிபாளையம் கன்னி மூல கணபதி, பால முருகன், வெள்ளையம்மன், பொம்மிஅம்பால் சமேத மதுரை வீரன் மற்றும் பட்டத்தரசி அம்மன், தன்னாசியப்பன், கனிமார், கருப்பராயன் கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகள் கடந்த 11ம் தேதியன்று, முகூர்த்தக்கால் போடும் நிகழ்வுடன் துவங்கியது. 17ம் தேதி, முளைப்பாளிகை இடும் நிகழ்வு நடந்தது.
24ம் தேதி, மங்கல இசை, திருவிளக்கு வழிபாடு, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, பிரவேச பலி, கும்ப அலங்காரம், முதற்கால யாக பூஜை, துவார பூஜை, வேதிகார்ச்னை, 108 வன மூலிகை திரவியாஹுதி, தீபாராதனை, விமான கோபுர கலசம் ஸ்தாபனம், கோபுர சிலை கண் திறப்பு, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வு நடந்தது. நேற்று, 25ம் தேதி, சூரிய கும்ப பூஜை, மூல மந்திர யாகம், பிம்பசுத்தி, காப்பணிவித்தல், நாடி சந்தானம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாத்ரா தானம், கடம் புறப்பாடு, கோபுர கலச மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும், சுவாமிக்கு மகா அபிஷேகம் அலங்காரம் தச தரிசனம் மகாதீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.