மதுராந்தகம் ஏரி காத்த கோதண்ட ராமர் கோவிலில் பிரம்மோத்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2026 12:07
செங்கல்பட்டு; மதுராந்தகம் ஏரி காத்த கோதண்ட ராமர் கோயிலில் ஆனி பிரமோற்சவ விழாவின் 8ம் நாளான இன்று தேரோட்டம் விமர்சையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்.
மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த கோதண்ட ராமர் கோவிலில் ஆனி மாத பிரம்மோத்சவம் ஜூன் 24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இங்கு மூலவர் சன்னதியில் ராமர்- – சீதையை கைப்பற்றியவாறு திருமண கோலத்தில் அமைந்திருப்பது சிறப்பு பெற்ற ஸ்தலமாகும். ஸ்ரீ ராமானுஜருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்த இத்தலத்திற்கு த்வியம் விளைந்த திருப்பதி என மற்றொரு பெயரும் உண்டு. பழமை வாய்ந்த இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து, கடந்தாண்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. அதை தொடர்ந்து ஆனி மாதத்தில் வருடாந்திர பிரம்மோத்சவ விழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக, இன்று ஜூலை 1ல் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து வழிபட்டனர்.