Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இடைக்காட்டூர் சர்ச்சில் மின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாலங்காடு மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு டிக்கெட் பெற மூன்று மணி நேரம் காத்திருக்கும் அவலம்
எழுத்தின் அளவு:
திருவாலங்காடு மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு டிக்கெட் பெற மூன்று மணி நேரம் காத்திருக்கும் அவலம்

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2026
03:07

திருவாலங்காடு; மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு பக்தர்கள் டிக்கெட் பெற, 3 மணி நேரம் காத்திருக்கும் அவலம் தொடர்வதால். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தினமும் 2,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில், 2010ம் ஆண்டு முதல் சனிக்கிழமை தோறும் மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடைபெற்று வருகிறது. இந்த பரிகார பூஜையில், காலை 6:00 முதல் மதியம் 1:00 மணி வரையில், 8 குழுக்களாக 85 பக்தர்கள் வரையில் பூஜையில் பங்கேற்று வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்தும் பூஜையில் பங்கேற்கின்றனர். ஒரு நபருக்கு 1,600 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்காக சனிக்கிழமை காலையில் கோவில் அலுவலகத்தில் டிக்கெட் விநியோகிக்கப்படுகிறது. இதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில், 3 மணி நேரம் வரையில் வரிசையில் காத்து நிற்க வேண்டி உள்ளதாக கூறுகின்றனர். எனவே ஆன்லைன் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி ஏற்கனவே இருந்தது போல மீண்டும் கோவில் நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்ள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்த கருட சேவை நிகழ்ச்சியில் ஏராளமானோர் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று பிரதான ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்: பலக்கனூத்து கோயில் திருவிழாவில், பாரம்பரிய சலகை எருது ஓட்டம் நடந்தது.பலக்கனூத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar