Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிபுரம் கோவில்களில் தைப்பூச ... அலகுமலையில் தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அபிராமி அம்மன் கோயில் திருப்பணி துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2013
11:01

திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் திருப்பணிக்காக அருகில் உள்ள கடைகளை தற்காலிகமாக காலி செய்ய உரிமையாளர்கள் ஒப்புதல் தெரிவித்திள்ளனர். .திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலை முழுமையாக திருப்பணி செய்து கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டுமென அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வந்தனர். தமிழக முதல்வரிடமும் கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் வருகை தந்த சட்டசபை மனுக்கள் குழுவினர் அபிராமி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான பணிகளுக்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து தகவல்களை கேட்டிருந்தனர். இதையடுத்து திருப்பணிக் குழு தலைவராக வேலுசாமியும், செயலாளராக குப்புசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆலோசனை கூட்டம்: திருப்பணிக்கான முதல் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் சேம்பர் ஆப் காமர்ஸ் கட்டடத்தில் நடந்தது. அபிராமி அம்மன் கோயிலை சுற்றியுள்ள 60க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். திருப்பணி நடக்க வேண்டுமா னால் முதல் கட்டமாக அதன் முழுமையான விஸ்தீரணத்தை தெரிந்து கொண்ட பின்புதான், எந்தெந்த வகைகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்று முடிவு எடுக்க முடியும். எனவே அனைத்து கடைகளையும் உரிமையாளர்கள் தற்காலிகமாக காலி செய்து கொடுக்க வேண்டும். இவர்களுக்கு நகராட்சி சார்பில் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.திருப்பணிக்கு பின்பு கிழக்கு பகுதியில் நிரந்தரமான கடைகளும், மேற்கு பகுதியில் கடைகள் எதுவும் இடம் பெறாமல் பார்த்துக் கொள் ளப்பட்டு சுற்றுச்சுவர் உயர்த்தி கட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.ஒரு சிலரை தவிர மற்ற அனைத்து கடை உரிமையாளர்களும் கோயில் திருப்பணிக்காக தங்கள் கடைகளை உடனடியாக காலி செய்து தருவதாக உறுதியளித்தனர். எதிர்ப்பு தெரிவித்தவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு மாதத்திற்குள் அப்பகுதியில் உள்ள கடைகளை அகற்றி விட்டு திருப்பணிக்கான பணிகளை முழு வீச்சில் துவக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar