மேட்டுப்பாளையம் மந்தை மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2026 04:07
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் புதூரில், மந்தை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பதினான்காம் ஆண்டு வெள்ளிக்கிழமை பூஜையும், சுமங்கலி பூஜையும் இன்று நடந்தது. கோவிலில் காலை கணபதி வேள்வி வழிபாடு, அன்னை வேள்வி வழிபாடு நடந்தது. அதைத் தொடர்ந்து பதினாறு வகை வாசனை திரவியங்களால், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு சிறப்பு பூஜையும், ஆராதனையும், பேரொளி வழிபாடும் நடந்தது. இந்த பூஜையில் ஜடையம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர்கள் பழனிசாமி, ராஜேஸ்வரி உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு தாலி கயிறு, வளையல் ஆகியவை வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை ஊர் கவுடர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.