நாகம்மன் கோவில் செடல் உற்சவம்; பூ பல்லக்கில் அம்மன் வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2026 10:08
கடலுார்: கடலுார் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள நாகம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் நாளான கடந்த 14ம் தேதி செடல் உற்சவம் நடந்தது. அதிகாலை முதல், ஏராளமான பக்தர்கள் வருகை தந்து செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டு விழா, பூ பல்லக்கில் அம்மன் வீதியுலா நடந்தது.