பாலக்காடு: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் வடக்கு நாதர் கோவில் முன், பிரம் மாண்ட அத்தப்பூக்கோலம் அனைவரையும் கவர்ந்தது.
கேரள மாநிலத்தில், ஓணம் பண்டிகை, வரும் 25, 26, 27 தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அத்தம் நாளான நேற்று முதல், பத்து நாட்கள் பூக்கோலம் போடுவது வழக்கம். இந்நிலையில், திருச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற வடக்கு நாதர் கோவிலில், தெற்கு கோபுர நடை முன், மாலை கூட்டமைப்பு சார்பில் பிரமாண்ட அத்தப்பூக்கோலம் போடப் பட்டுள்ளது. இதை ஏராளமான மக்கள் கண்டு மகிழ்ந்தனர். இந்த அமைப்பின் தலைமையிலான, 150க்கும் மேற்பட்டோர் சேர்ந்து, 30 அடி விட்டத்தில், இரண்டாயிரம் கிலோ மலர்களால், இக்கோலத்தை தயாரித்துள்ளனர். செண்டு மல்லி, வாடா மல்லி, சாமந்தி ஆகிய பூக்கள் பூக்கோலத்திற்கு மேலும் வண்ண பொலி வூட்டின. பூக்கோலத்தை செல்பி எடுக்கவும், கண்டு மகிழவும், காலை முதல் மக் கள்திரண்டு வந்திருந்தனர். இந்த அமைப்பு கடந்த 19 ஆண்டுகளாக, தொடர்ந்து அத்தப்பூக்கோலமிடுவதை குறிப்பிடத்தக்கது. கடைபிடித்து வருவது இதையொட்டி நடந்த நிகழ்ச்சியை, கொச்சின் தேவஸ்தானம் நிர்வாக குழு தலைவர் ரவீந்திரன் மற்றும் திருச்சூர் மாநகராட்சி மேயர் நிஜி ஜஸ்டின் ஆகியோர் சேர்ந்து துவக்கி வைத்தார்.