கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தின் சார்பில் 33 ஆம் ஆண்டு கஞ்சி கலைய ஊர்வலம் நடந்தது. கண்டாச்சிபுரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் நடந்த கஞ்சிக்கலைய ஊர்வல விழாவிற்கு மாவட்ட பொருளாளர் மணிவாசகம் தலைமை வகித்தார். மோகன கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தொழிலதிபர் செல்வகணபதி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். முன்னதாக ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் சிறப்பு தீபாரதனை நடந்தது. கைலாய வாத்திய இசையுடன் நடந்த ஊர்வலத்தில் நல்லாப்பாளையம், கடையம், மேல் வாலை, உடையாநத்தம், ஒடுவன் குப்பம், கண்டாச்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் முளைப்பாரி, தீச்சட்டி, கஞ்சி கலையத்துடன் ஊர்வலம் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் செயலாளர் அன்பு,சிவக்குமார் ஆகியோர் செய்தனர். அருள்ஜோதி நன்றி கூறினார்.