குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில், விவசாயம் செழிக்கவும், மக்களின் வளமான வாழ்க்கைக்காகவும், வயலில் விளையும் நெற்கதிர்களால், இல்லம் நிறை பூஜை நடக்கிறது. இந்த ஆண்டு பூஜை இன்று நடந்தது. கோவில் கொடிமரத்தின் அருகே காலை, 8:30 மணி முதல் நடந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட நெற்கதிர்களை வாங்கிச் சென்றனர். கோவில் தந்திரி பிரஹ்மஸ்ரீ தினேசன் நம்பூதிரிப்பாடு மேற்பார்வையில், மேல்சாந்தி பிரஹ்மஸ்ரீ நாராயணன் நம்பூதிரி தலைமையில் பூஜை நடைபெற்றது. லட்சுமி பூஜைக்கு பிறகு நெற்கதிர்கள் மூலவருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின், நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. கோவில் தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் மனோஜ், பி. மனோஜ், ஷினிஜா, உதவி மேலாளர்கள் பிரசாந்த், ஹரிதாஸ் ஆகியோர் பூஜையில் கலந்து கொண்டனர்.