வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் ஆவணி மாத சிறப்பு பூஜை நடந்தது.
ஆவணி மாத முதல் நாளான இன்று வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 7:00 மணிக்கு அபிேஷக பூஜை, 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல், வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலில் நேற்று காலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து காலை, 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.