Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் குறைந்து வரும் மயில்கள்! மாமதுரை போற்றுவோம் நிறைவு: வைகையில் மக்கள் வெள்ளம்! மாமதுரை போற்றுவோம் நிறைவு: வைகையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் புடைசூழ மாசாணியம்மன் குண்டம் திருவிழா விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 பிப்
2013
10:02

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், பக்தர்கள் புடைசூழ குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில்ஆண்டு தோறும் தை மாத அமாவாசையில் கொடியேற்றத்துடன் குண்டம் திருவிழா துவங்குவது வழக்கம்.இந்த ஆண்டு கொடியேற்றத்துக்காக ஆனைமலை பகுதியிலிருந்து 80 அடி உயரமுள்ள மூங்கில் வெட்டி தோளில் பக்தர்களால் சுமந்து கொண்டு வரப்பட்டது.உப்பாற்றில் கொடிமரத்தை நீராட்டி வஸ்திரம், மலர், சந்தனம், குங்குமம் இட்டு சிம்மக்கொடி ஏற்றி வழிபட்டனர். இதற்கான பூஜை முடிந்தவுடன், காப்புக்கட்டி மேள தாளங்களுடன் ஆனைமலையில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களால் எடுத்து செல்லப்பட்டு கோவில் வளாகத்துக்கு நேற்று காலை 10.00 மணிக்கு கொண்டு வரப்பட்டது.

காலை 11.00 மணிக்கு கோவில் முன்பு கொடிமரம் நிலைநிறுத்தி, கொடியேற்றப்பட்டது. அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், வேளாண் அமைச்சர் தாமோதரன், துணை சபாநாயகர் ஜெயராமன் முன்னிலையில் நடந்த இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.அப்போது, "மாசாணித்தாயே என்று கோஷம் எழுப்பி பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், எம்.பி.சுகுமார், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், முத்துகருப்பண்ணசாமி, மேயர் வேலுச்சாமி, மாசாணியம்மன் கோவில் தக்கார் குமரதுரை, கோவில் உதவி ஆணையர் அனிதா, கண்காணிப்பாளர்கள் செந்தமிழ்செல்வன், சேகர், ஆனைமலை பேரரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார், ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரிவாசு, மாசாணியம்மன் நற்பணிமன்றத்தினர், முறைதாரர்கள், விழாக்குழுவினர் பங்கேற்றனர்.குண்டம் விழா வரும் 26ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி வரும் 28ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

அமைச்சர்களுக்காக காத்திருந்த கொடிமரம்: காலை 10.30 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக 10.10 மணிக்கு துணை சபாநாயகர் ஜெயராமன், மேயர் வேலுச்சாமி ஆகியோர் வந்தனர். அதேசமயத்தில் கொடிமரமும் கோவில் வளாகத்தினுள் வந்தது. கொடி மரம் நிலைநிறுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.ஆனால் அமைச்சர் ஆனந்தனும்; தாமோதரனும் வர தாமதமானதால் கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் வெயிலில் காத்திருந்தனர். காலை 11.00 மணிக்கு இரு அமைச்சர்களும் வந்த பிறகு 11.05 மணிக்கு கொடி மரம் நிலைநிறுத்தப்பட்டது. கூட்டத்தில் இருந்த பக்தர்கள், "தெய்வத்திற்காக மனிதன் காத்திருந்த நிலை மாறி அமைச்சர்களுக்காக தெய்வம் காத்திருக்க வேண்டியுள்ளது என்று கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar