Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவில் ... சுருளியில் சிவன் கோயில் கட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதியம் 3.15 மணிக்கு, பேரூர் கோவில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2013
11:02

பேரூர்: பேரூர் கோவில் தேரோட்டம் மதியம் 3.15 மணிக்கு நடத்தப்படும்,என, ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடக்கிறது. பல நூற்றாண்டுகளாக, பேரூர் கோவில் தேர் எப்போதும் இரவு 8.00 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. பெரும்பாலான சமயம் மறுநாள் அதிகாலை தேர்நிலை சேர்வதும், ஒரு சில சமயங்களில் தேர் நிலை சேராமல் ரோட்டோரத்தில் இறங்கிவிடுவதால், தேர்நிலை சேர்வதில் சிக்கல் இருந்தது. இரவு நேரத்தில் மின்தடை ஏற்படும் போது, ரோட்டோரத்தில் இருபுறமும் பக்தர்களின் நெரிசலுக்கு மத்தியில் தேரை வடம் பிடித்து இழுப்பதிலும் சிரமம் நிலவுகிறது. கோவை உள்பட பல்வேறு முக்கிய கோவில்களில் இரவு நேரங்களில் இழுக்கப்பட்ட தேர் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதை தவிர்க்கும் வகையிலும், கோவில் நிர்வாக வசதிக்காகவும், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், வரும் காலங்களில் பகலில் தேர் இழுக்கப்படுமென, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், வரும் மார்ச் 23ம் தேதி தேரோட்டம் நடக்கவுள்ளது. இதையடுத்து, பகலில் தேரோட்டம் நடத்தப்படுவது குறித்தும், ரோட்டோரமுள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேரோட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம், பேரூர் கோவிலில் அதிகாரி குமரதுரை தலைமையில் நேற்று நடந்தது. இதில், பேரூராதீனம் சாந்தலிங்கராமசாமி அடிகள், சிவபக்தர்கள் நலச்சங்கத்தினர், இந்துமுன்னணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், இனிவரும் காலங்களில் மதியம் 3.15 மணிக்கு கோவில் தேரோட்டம் நடத்தப்படுவதெனவும், அதற்கு முன்பாக ரதவீதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதெனவும் முடிவு செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
ஊட்டி: ஊட்டி புதிய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவிலில் கூடாரவல்லி நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar