Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காவிரி புண்ணியத்தில் ஸ்ரீரங்கம் ... வால்பாறையில் கோவில் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருணையே வடிவான காஞ்சி காமாட்சி அம்மனின் பிரம்மோற்சவ விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 பிப்
2013
11:02

காஞ்சிபுரம்: கோவில் நகரம் என, பெருமை பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நந்தன ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நாளை, 15ம் தேதி துவங்குகிறது. இம்மாதம், 27ம் தேதி வரை இவ்விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. முதல் சோழர்களால், சங்க காலத்தில் எடுப்பிக்கப்பட்ட இக்கோவிலில், கரிகால்வளவன் வழிபட்ட பின்னரே, தன் படையெடுப்புக்களை துவக்கி உள்ளான் என, வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் உள்ள கல்வெட்டில், கி.பி. 725ல், இரண்டாம் நரசிம்ம பல்லவனின் மனைவியான, லோகமாதேவி, பிரம்ம ராட்சஷனால் பிடிக்கப்பட்டு, மகிழம்பள்ளி ஆச்சாரியாரால் நலம் பெற்ற குறிப்பு காணப்படுகிறது. காஞ்சியை ஆண்ட அனைத்து வேந்தர்களாலும், மக்களாலும் முதலிடத்தில் வைத்து சிறப்பிக்கப்பட்ட காமாட்சியம்மன் கோவிலில், சரித்திரம் கூறும், 65 கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றில், கோவிலுக்கு கொடுக்கப்பட்ட தானங்கள், விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. சக்தி பீடங்கள் 64ல், இது ஆதீ பீடமாகும். பண்டன் என்ற அசுரன் சிறுமியைத் தவிர வேறு யாராலும் அழிவு ஏற்படக்கூடாது என, வரம் பெற்று தேவர்களை துன்புறுத்தினான். அவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர். அம்பிகை, சிறுமியாக உருமாறி அசுரனை அழித்தாள். தேவர்கள் வேண்டுதலுக்காக, காஞ்சிபுரத்தில் அம்பிகை எழுந்தருளினாள். பக்தர்களின் விருப்பங்களை(காமம்) அருளும் கருணைக் கண் கொண்டவள் (ஆட்சி-கண்) என்பதால் "காமாட்சி எனப் பெயர் பெற்றாள். முப்பெரும் தேவியரின் அம்சமாக காமாட்சி அருளுகிறாள். "கா என்பது மகாலட்சுமியையும், "மா சரஸ்வதியையும் குறிக்கும். உற்சவ அம்பிகையுடன் லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் இருக்கின்றனர். இத்தலத்தில், ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரம்மனால் ஏற்படுத்தப்பட்ட உத்சவமே, பிரம்மோற்சவம். இந்நாட்களில், அம்மன், உற்சவராக, பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar