பதிவு செய்த நாள்
20
பிப்
2013
11:02
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள வெள்ளூர் சிவன் கோவிலில் மாசித் தேரோட்டம் நடந்தது. வெள்ளூர் நடுநக்கர் மத்திய பதீஸ்வரர் சிவகாமி அம்பாள் கோவில் மாசித்திருவிழாவில் நேற்று 9ம் திருவிழாவை முன்னிட்டு காலை விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் தோளுக்கினியானில் 9மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். காலை 10.30 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள், தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என பக்திபெருக தேங்காய்பழம், பூமாலை சாற்றி வழிபட்டனர். மதியம் 12.30 மணியளவில் தேர் நிலையம் வந்தடைந்தது. விழாவில் முன்னாள் காவல்துறை தலைவர் மாசானமுத்து, நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், பஞ்., தலைவர் புஷ்பலதா முத்தையா, விவசாய சங்க தலைவர் அலங்காரம், கவுன்சிலர் ராமன், முன்னாள் கவுன்சிலர் பொன்ராஜ், ஸ்தலத்தார் வெங்கடாச்சாரி, ஸ்ரீவை., வக்கில் சங்க தலைவர் கருப்பசாமி. இன்ஜினியர் காளியப்பன், கந்தன், ஆறுமுகம், ராமசாமி, தளவாய், ஆறுமுககுமார், தளவாய், துரைமுருகன், சுடலை, தலைமைகாரர் சங்கரபாண்டியன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், துரை, நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.