Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா காமாட்சியம்மன் கோவிலில் இன்று காலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிடாரி செல்லாண்டியம்மன் கோவிலில் தூக்குத்தேர் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2013
11:02

மோகனூர்: பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் தூக்குத் தேர்த்திருவிழா, இன்று உள்ளூர் சுற்றுடன் கோலாகலமாக துவங்குகிறது. மோகனூர் அடுத்த, ஒருவந்தூரில் பிரசித்தி பெற்ற பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருவிழா கடந்த, 20ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. இன்று, (ஃபிப்., 27) எடுத்துக்கட்டு சாவடியில் இருந்து கொண்டுவரப்பட்ட திருத்தேரில், அதிகாலை, 5 மணிக்கு ஸ்வாமி எழுந்தருளுகிறார். தொடர்ந்து, தூக்கு தேரை பக்தர்கள் எடுத்துக் கொண்டு, உள்ளூரை வலம் வருகின்றனர். ஒருவந்தூரில் உள்ள அனைத்து வீதிகள் வழியாக செல்லும் ஸ்வாமிக்கு, பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபடுகின்றனர். தொடர்ந்து, கிடா வெட்டி அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். நாளை (ஃபிப்., 28) ஒருவந்தூர்புதூர் தெற்கு, வடக்குதெரு, செல்லிபாளையம், கணபதிபாளையம், தொட்டிப்பட்டி, நொச்சிப்பட்டி, ஓடக்காட்டூர், குஞ்சாயூர், நல்ல செல்லிபாளையம் ஆகிய கிராமங்களுக்கு தேர் எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு, ஸ்வாமிக்கு பக்தர்கள் கிடாவெட்டி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். மார்ச், 1ம் தேதி இரவு, 7 மணிக்கு எடுத்துக்கட்டு சாவடியில் இருந்து ஸ்வாமி உள்ளூர் சுற்றி பூஜை செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து, கோவிலுக்கு குடிபுகுதல், கிடாவெட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதில், பாரம்பரிய முறைப்படி பேட்டப்பாளையம் பஞ்சாயத்து தலைவர் சரவணனை, குதிரையில் அழைத்து வந்து சிறப்பு மரியாதை செய்கின்றனர். தொடர்ந்து கிடாவெட்டும், வாணவேடிக்கையும் நடக்கிறது. மார்ச், 5ம் தேதி மாலை, 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சுப்ரமணியம், ஒருவந்தூர் பஞ்சாயத்து தலைவர் செல்ல ராஜாமணி, நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்துாண் தான். தீபம் ஏற்றலாம் என மதுரை உயர் நீதி ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிய வழக்கில், அரசின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவ முன்னிட்டு சிவாச்சாரியார் ... மேலும்
 
temple news
திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், வெற்றி விநாயகர் சுவாமிக்கு சங்கடஹர ... மேலும்
 
temple news
கோவை;  மார்கழி மாதம் மூன்றாவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் - தென்னம்பாளையம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar