பதிவு செய்த நாள்
14
பிப்
2011
05:02
திருநெல்வேலியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பெருமான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று உத்ஸவர் கள்ளபிரானை அர்த்த மண்டபத்துக்குள் கொண்டு செல்வர். இவ்வேளையில் சன்னதியை அடைத்து விடுவர். பின் கண் இமைக்கும் நேரத்தில் நடை திறந்து, சுவாமிக்கு தீபாராதனை காட்டி உடனே அடைத்து விடுவர். ஒரு சில மணித்துளிக்குள் இந்த வைபவம் நடந்து முடிந்துவிடும். இவ்வேளையில் சுவாமியை தரிசித்தால், பிறப்பில்லா நிலை கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒன்பது மூலவர்கள் !
எட்டு வகையான சயனத் திருக்கோலங்களில் பல்வேறு திருத்தலங்களில் மாகாவிஷ்ணு காட்சியளிக்கிறார். அவை உத்தான சயனம் - திருக்குடந்தை; தர்ப்பசயனம் - திருப்புல்லாணி ; தலசயனம் - மாமல்லபுரம்; புஜங்க சயனம் - திருவரங்கம், திருஅன்பின், திருஆதனூர், திருவள்ளூர், திருக்கரம்பனூர், திருக்கவித்தலம்; போக சயனம் - திருச்சித்ரகூடம்; மாணிக்கசயனம் - திருநீர்மலை; வடபத்ரசயனம் - திருவில்லிப்புத்தூர், வீரசயனம் - திருஇந்தளூர்.
ஸ்ரீவைகுண்டம் கண்ணபிரான் மேனியில் சாத்தப்பட்டிருக்கும் தங்கக் கவசம் வருடம் ஒருமுறையே கழற்றப்படுகிறது.
உத்திரமேரூர் பெருமாள் கோயிலில் ஒன்பது மூலவர்கள் காட்சித் தருகிறார்கள்.
பெருமாள் வலமிருந்து இடமாக பள்ளிகொண்ட தலம் திருவெஃகா.
ஒரு ஆழாக்கு - நுற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.
ஒரு உழக்கு - முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்.
ஒரு கலம் - அறுபத்தி நாலரை லிட்டர்.
ஒரு தூணி - இருபத்தி ஒன்றரை லிட்டர்.
ஒரு நெய்க் கரண்டி - தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி - இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்.
ஒரு பாலாடை - முப்பது மில்லி லிட்டர்
ஒரு குப்பி - எழுநூறு மில்ல லிட்டர்.
ஒரு அவுன்ஸ் - முப்பத்தியொரு கிராம்.
முன்னூற்று அறுபது நெல் - ஒரு சோடு.
ஐந்து சோடு - ஒரு ஆழாக்கு.
இரண்டு ஆழாக்கு - ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு - ஒரு உரி.
இரண்டு உரி - ஒரு நாழி.
எட்டு நாழி - ஒரு குறுணி.
இரண்டு குறுணி - ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு - ஒரு தூணி.
மூன்று தூணி - ஒரு கலம்.