Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நடுபழனி தண்டாயுதபாணி கோவிலில் இன்று ... காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி பிரார்த்தனை: அலகு குத்தி நேர்த்திக் கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2013
10:03

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கூடலூர் கிராமத்தில், மழை வேண்டி, பக்தர்கள் அலகு குத்தி, முருகன், அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுராந்தகத்தை அடுத்துள்ள கூடலூர் ஊராட்சியில், கெங்கையம்மன், மாரியம்மன் மற்றும் முருகன் கோவில்கள் அமைந்துள்ளன. இவற்றில், கடந்த 45 ஆண்டுகளாக, பங்குனி மாதத்தில் பக்தர்கள் விரதமிருந்து, நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். நேர்த்திக் கடன் இங்குள்ள மக்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து விட்டதால், கிராமத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் வறண்டு, விவசாயம் முடங்கியது. எனவே, இந்த ஆண்டு பங்குனி உத்திர விழாவில், "மழை பெய்ய வேண்டும், விவசாயம் பெருக வேண்டும், வீடும் நாடும் செழிக்க வேண்டும், என, சிறுவர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர். பின், கிராமத்தில் எழுந்தருளியுள்ள சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனை செய்தனர். கடந்த மூன்று நாட்களாக நடந்த வழிபாட்டில் முதல் நாளான 22ம் தேதி காலை 9:00 மணிக்கு கெங்கையம்மனுக்கு பால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. அலகு குத்தி... இரண்டாவது நாளான 23ம் தேதி காலையில் முருகனுடைய, வேலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் உடலில் அலகு குத்தி, அந்தரத்தில் தொங்கியவாறு மாரியம்மனுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4:00 மணிக்கு பக்தர்கள் முருகன் கோவிலுக்கு சென்று அங்குள்ள கோவில் குளத்தில் புனித நீராடி, முருகனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar