Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலத்தில் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2013
11:03

சேலம்: சேலத்தில், பங்குனி உத்திரப் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முருகன் கோவில்களுக்கு பக்தர்கள், திரளாக காவடி எடுத்து சென்று தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். பங்குனி உத்திரத்திருநாளில், முருகன் கோவில்களில், இறைவனின் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். முருகப்பெருமானின் அருளைப்பெறுவதற்கு, பங்குனி உத்திரத்தில், விரதம் இருந்து கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினால், நன்மைகள் கிட்டும் என்பது ஐதீகமாகும். சேலம் மாவட்டத்தில், நேற்று பங்குனி உத்திரத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அம்மாப்பேட்டை குமரகிரி தண்டாயுதபாணி கோவிலில், காலை, 6 மணிக்கு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. அம்மாப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டா ரபகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே, கோவிலுக்கு மயில்காவடி, பால்காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து ஊர்வலமாக வந்தனர். காலை, 11 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மதியம், 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 7 மணிக்கு, ஸ்ரீ சண்முகசாமி மாடவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. ஜாகீர் அம்மாப்பாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில், காலை, 6 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது. சேலம் ஊத்துமலை பாலசுப்ரமணி கோவில், அம்மாப்பேட்டை முருகன் கோவில் ஃபேர்லாண்ட்ஸ் முருகன் கோவில், குமாரசாமிப்பட்டி முருகன் கோவில், டி.பெருமாப்பாளையம் கொம்பேரிக்காடு சிவசக்தி முருகன் கோவில், சென்ன கிருஷ்ணாபுரம் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு, சந்தனம், குங்குமன், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பக்தர்கள் காவடி எடுத்து, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். அனைத்து கோவில்களிலும், புளிசாதம், தயிர், பொங்கல் உள்ளிட்டவை, பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் உட்பட திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் ஐப்பசி மாத கார்த்திகையை ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: ஐப்பசி மாத கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar