Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திரிவிக்ரம சுவாமி கோவிலுக்கு ... மீனாட்சி அம்மனுக்கு ஏப்.,21ல் பட்டாபிஷேகம்! மீனாட்சி அம்மனுக்கு ஏப்.,21ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஞ்சனூர் செபஸ்தியார் ஆலய தேர் பவனி கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2013
11:04

கந்தர்வக்கோட்டை: கந்தர்வக்கோட்டை அருகே மஞ்சனூர் கிராமத்தில், புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர்பவனி வெகு கோலாகலமாக நடந்தது. இதில், பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். புதுகை மாவட்டம், கந்தர்வக்கோட்டையை அடுத்த மஞ்சனூர் கிராமத்தில், உலகின் ஒளி திருச்சிலுவை கொடியேற்றத்துடன் விழா கடந்த 31ம் தேதி துவங்கியது. இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு ஜெப வழிபாடு நடந்தது. தொடர்ந்து, தினமும் கிறிஸ்தவ சொற்பொழிவு, வழிபாடுகள் நடத்தப்பட்டன. பின்னர், நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் நேற்று அதிகாலை வரை நான்கு மணி வரை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில், செபஸ்தியாரின் சொரூபம் ஏந்திய மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி வெகுகோலாகலமாக நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, பிரார்த்தனை செய்தனர். ஒவ்வொரு வீட்டிலும் செபஸ்தியாருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தினையில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டனர். ஏற்பாட்டை புனித செபஸ்தியார் ஆலய பரம்பரை கோவில்பிள்ளைகள் மற்றும் கிறிஸ்தவர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி., தமிழ்ச்செல்வன் உத்தரவின்பேரில், கந்தர்வக்கோட்டை இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் தலைமையில் 100 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் வாமன அவதாரத்தை போற்றும் நாள் இது. பெருமாள் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar