Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செண்பகவல்லியம்மன் கோயில் பங்குனி ... தஞ்சை கோயிலுக்கு ரூ.50 லட்சம் செலவில் புதிய தேர் தஞ்சை கோயிலுக்கு ரூ.50 லட்சம் செலவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆற்றில் அழகர் இறங்க தண்ணீர் திறப்பு : நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 ஏப்
2013
10:04

மதுரை : மதுரையில் ஏப்., 25ல் நடக்கும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக, தண்ணீர் திறந்து விட ஏற்பாடுகள் நடக்கின்றன. இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இரண்டு பருவ மழையும் பொய்த்து விட்டதால், கண்மாய்கள் மட்டுமின்றி, அணைகளும் வறண்டு விட்டன. குடிநீர் பிரச்னையைக் கூட சமாளிக்க முடியுமா என்ற நிலை உள்ளது. இந்நிலையில், ஏப்.,25ம் தேதி நடக்கும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு விழாவிற்காக, தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்தனர். பெரியாறு கிரெடிட்டில் உள்ள தண்ணீர், மதுரையின் குடிநீருக்கு மட்டுமே பயன்படும். இதன்படி ஜூன் இறுதி வரையான தேவைக்கு அங்கு தண்ணீர் உள்ளது. வைகை அணையில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு முறையே 2:3:7 என்ற வீதத்தில் தண்ணீர் பங்கீடு வழங்கப்படும். இந்நிலையில், ஏப்.,15 முதல் 4 நாட்களுக்கு, மேற்கூறிய மாவட்டங்களின் தேவைக்காக வைகையில் தண்ணீர் திறந்துவிட்டால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என ஆலோசனை நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தினரோ, சற்று தாமதமாக திறந்தால் தங்கள் தண்ணீர் தேவைக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருதினர். திறக்க வாய்ப்பு: இதையடுத்து, அழகர் விழாவிற்கும், 3 மாவட்ட தண்ணீர் தேவைக்குமாக சேர்த்து, ஒரேநேரத்தில் தண்ணீர் திறக்கலாம் என முடிவெடுத்துள்ளனர். இதன்படி வைகை அணையில் இருந்து ஏப்., 20 முதல் 25ம் தேதி வரை 6 நாட்களுக்கு தண்ணீர் திறக்கலாம் என அதிகாரிகள், அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர். வைகை அணையில்(உயரம் 71 அடி) நேற்றைய நிலவரப்படி 46 அடி நீர்மட்டம் உள்ளது. இதில் ஏப்., 20ம் தேதி நிலவரப்படி, 736 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கும். இதில் ஆவியாதல் (30 மி.க.அ.,), இறுதிகட்ட ஸ்டோரேஜ் (43 மி.க.அ.,), அவசரத் தேவை (33 மி.க.அ.,) போக மீத இருப்பு 630 மி.க.அ., நீர்தான். இதில் 3 மாவட்டங்களுக்குமான விகிதாச்சாரப்படி, மதுரைக்கு 105 மி.க.அ., சிவகங்கைக்கு 157 மி.க.அ., ராமநாதபுரத்திற்கு 367 மி.க.அ., கிடைக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar