பதிவு செய்த நாள்
15
ஏப்
2013
10:04
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகனுக்கு, சிங்கப்பூர் தொழிலதிபர், தங்க கிரீடம் காணிக்கையாக வழங்கினார். தமிழ்ப் புத்தாண்டையொட்டி, நேற்று, கோவில்நடை, அதிகாலை, 3:00 மணிக்கு திறக்கப்பட்டது. 3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4:00 மணிக்கு, உதய மார்த்தாண்ட அபிஷேகம், மற்ற காலங்கள் தொடர்ந்தன. ஏராளமான பக்தர்கள், குடும்பத்தினருடன் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று ”வாமி தரிசனம் செய்தனர். சிங்கப்பூர் தொழிலதிபர், ராஜ்குமார் - ஜெய் தம்பதினர், திருச்செந்தூர் கோவில் மூலவர் சுப்பிரமணியருக்கு, அணிவிப்பதற்காக, 1 கிலோ, 400 கிராம் கொண்ட, 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள, தங்க கிரீடத்தை, காணிக்கையாக, கோவில் இணை ஆணையர் அன்புமணி, தக்கார் மணிகண்டனிடம் வழங்கினர்.