பதிவு செய்த நாள்
15
ஏப்
2013
11:04
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு கரியகாளியம்மன் கோவிலில், நேற்று சித்திரைக்கனியை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ஆனைமலை அருகேயுள்ள சேத்துமடை தேவிகுல காளியம்மன் கோவிலில் இருந்து 15 தீர்த்த குடங்களும், கொண்டம்பட்டி பக்தர்கள் கொடுமுடியில் இருந்து நான்கு தீர்த்த குடங்களும் எடுத்து வந்தனர். இந்த தீர்த்தங்களால், காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜையில் ஊற்றப்பட்டது. தொடர்ந்து, பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் போன்றவகைளால் அபிஷேகம் பூஜை காலை 5.30 மணிக்கு செய்யப்பட்டது. பின், காளியம்மனுக்கு, கனிகளாலும், காய்கறிகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு, ரூபாய் நோட்டுகளால் மாலை அணிக்கவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப் பட்டது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிணத்துக் கடவு சிவலோகநாதர், பொன்மலை வேலாயுதசாமி, முத்துக்கவுண்டனூர் முத்துமலை முருகன், அரசம்பாளையம் திருநீலகண்டர், தேவணாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர், சூலக்கல் விநாயகர் மாரிம்மன் போன்ற கோவில்களில் அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன.