உடுமலை: திருமூர்த்தி நகர் வனதுர்க்கை அம்மன் கோவில் ஒன்பதாம் ஆண்டு விழா கடந்த 9ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நாளை மதியம் தீர்த்தம் கொண்டு வருதல், இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு கும்பஸ்தானம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 17ம் தேதி காலை 5:30 மணிக்கு மாவிளக்கு எடுத்து வருதல், காலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம், காலை 7:00 மணிக்கு பூவோடு எடுத்தலும், அன்னதானமும் நடக்கிறது. 18ம் தேதி மாலை 4:30 மணிக்கு அம்மன் திருவீதி உலா; 19ம் தேதி காலை 11:30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது.