Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஸ்தலசயன பெருமாள் கோவிலில் ... மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் 1,008 பால்குட அபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2013
11:04

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, தமிழ் புத்தாண்டையொட்டி, 1,008 பால்குட அபிஷேகம் நடந்தது. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, 1,008 பால்குட அபிஷேகம் மற்றும் சிறப்பு தரிசனம் நடந்து வருகிறது. அதே போல், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு, 12:01 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு தங்க கிரீடம், தங்க வேல், பச்சைமாணிக்க மரகத கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. கோவில் நடை, நேற்று முன்தினம் இரவு முழுவதும் திறந்து வைக்கப்பட்டது. நேற்று காலை, 8:00 மணிக்கு, கோட்ட ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் இருந்து, 1,008 பால்குட ஊர்வலத்தை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், கோவில் இணை ஆணையர் புகழேந்தி, நகராட்சி தலைவர் சவுந்தர்ராஜன் துவக்கி வைத்தனர். பக்தர்கள் தலையில் பால்குடம் சுமந்து, பெரிய தெரு, கீழ்பஜார் தெரு, ஜோதிசாமி தெரு, கந்தசாமி தெரு, ம.பொ.சி.சாலை வழியாக மலைப்படிகளில் ஏறி மலைக்கோவிலுக்கு சென்றனர். பின்னர் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு, 1,008 பால்குடம் ஊற்றி அபிஷேகம் நடத்தப்பட்டது. மூலவர், சண்முகர், ஆபத்சகாய வினாயகர், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழகம், ஆந்திரா மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், மூலவரை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில், நான்கு மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். புத்தாண்டை முன்னிட்டு நேற்று ஏராளமானோர் மலைக்கோவிலுக்கு வந்திருந்தனர். வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வந்தவர்கள் மலைப்பாதை வழியாக கோவிலுக்கு வந்தனர். மலைப்பாதையில் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால், வாகனப் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது. கடும் நெரிசல் காரணமாக, குறைந்தபட்சம் ஒரு வாகனம் மலை உச்சியை சென்றடைய மூன்று முதல், நான்கு மணி நேரம் பிடித்தது.
இதேபோல், முருகன் கோவிலின் உபகோவிலான மத்தூர் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலிலும், தமிழ் புத்தாண்டையொட்டி, 1,008 பால் குட அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar