சித்திரையில் முதல் மரியாதை: பாரம்பரியம் காக்கும் கிராமங்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2013 10:04
மேலூர்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, மேலூரில் நேற்று அனைத்து சமுதாயத்தை சேர்ந்த 20 ஆயிரம் குடும்பங்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுத்து முதல் மரியாதை செய்யப்பட்டது. தும்பைபட்டியில் மதநல்லிணக்க திருவிழா நடந்தது.மேலூர் வெள்ளலூரை தலைமையிடமாக கொண்டு வெள்ளலூர், அம்பலகாரன்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, மலம்பட்டி என ஐந்து மாகாணங்கள் உள்ளது. இங்குள்ள 60 கிராம மக்களும், நேற்று வெள்ளலூர் மந்தை கருப்பசாமி கோயில் முன்பு கூடினர். 11 கரையை சேர்ந்த 22 அம்பலகாரர்கள், 22 இளங்கச்சிகள் முன்னிலையில், 200 கிலோ எடை உள்ள வெற்றிலை மந்தையில் வைக்கப்பட்டது.இவற்றை 60 கிராம மக்களுக்கும் பிரித்து கொடுக்கப்பட்டது. பெற்ற வெற்றிலை பாக்கை, இறைவனுக்கு படைத்தனர். பின், வயலுக்கு மாடுகளை ஓட்டிச் சென்று, விவசாய பணிகளை துவக்கினர். இப்படி செய்தால்விவசாயம் செழிக்கும் என்பது இவர்களது நம்பிக்கை.மத நல்லிணக்க திருவிழா : தும்பைப்பட்டி தெற்குவளவு மந்தையில் அனைத்து ஜாதியினர் மற்றும் மதத்தினர் கலந்து கொண்ட திருவிழா நடந்தது. பள்ளிவாசல் நோட்டம் பொறுப்பை வகிக்கும் முஸ்லிம் பிரமுகர்அனைத்து சமுதாயத்தினருக்கும் வெற்றிலை பாக்கு வழங்கி மரியாதை செய்தார். மத நல்லிணக்க திருவிழாவாக 800 ஆண்டுகளாக இப் பழக்கம் இவ்வூரில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஜாதி, மத மோதல்களை தடுக்க, இது போன்ற கிராம மக்களை முன் மாதிரியாக கொள்ள வேண்டும்.