பதிவு செய்த நாள்
16
ஏப்
2013
10:04
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், யதோக்தகாரி பெருமாள் கோவிலில், புஷ்ப பல்லக்கு உற்சவம், நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடந்தது.காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், கடந்த, 2ம் தேதி துவங்கி 11ம் தேதி நிறைவு பெற்றது. தினமும் காலை மற்றும் இரவு, வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. விடையாற்றி உற்சவமாக, நேற்றுமுன்தினம் காலை, 10:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது. பெருமாள் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி, மாட வீதிகளை வலம் வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு நின்று, பெருமாளை வழிபட்டனர்.