Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ... தனுசு: ஐயையையோ ஆனந்தமே! கோடி நன்மை ஆரம்பமே! தனுசு: ஐயையையோ ஆனந்தமே! கோடி நன்மை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருச்சிகம்: படைத்தவன் இருக்கான் பார்த்துக் கொள்வான்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 மே
2013
11:05

நாணயத்துடன் வாழ விரும்பும் விருச்சிகராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு7ல் சஞ்சரிக்கும் குரு, மே28 முதல் ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதை அஷ்டம குரு என்பர். அவரின் சுபபார்வை 2,4,12 ஆகிய ராசிகளில் பதிகிறது. விரய ஸ்தானமான 12ல் சஞ்சரிக்கும் சனி 2,6,9 ஆகிய இடங்களைப் பார்க்கிறார்.  சொல்லவே பொன்னவனும் ஜென்மம் மூன்று சுகமான நாலாறு எட்டு பத்து வல்லவே பன்னிரண்டில் இருந்து வாழ அலைச்சலோடு சத்துரு நிஷ்டூர வாதம்புல்லவே சகோதரர் தாய் மனையாள் புத்திரரின்நலம் கெடும் பொருளும் போகும் அல்லவே மன்னவரால் பதியும் சேதம் அரிவையர் தங்களால் வியாதியாமே!என்கிறது ஒரு வெண்பா.எட்டில் குரு வந்தால், அவரால் நடக்க வேண்டிய நன்மைகள் தடைபடும் என்று எச்சரிப்பதே இந்த ஜோதிட வெண்பாவின் நோக்கம். ஏழரைச்சனி வேறு நடப்பதால் நிலைமை கொஞ்சம் சிக்கலோ என்று எண்ண வேண்டியுள்ளது. இருப்பினும், குருவின் 12ம் இட பார்வை ஏழரையின் தாக்கத்தை குறைக்கும்.மற்ற கிரகங்களால் கடுமையை எதிர்கொண்டாலும் கேதுவின் அனுகூலத்தால் ஆன்மிக சிந்தனை மேலோங்கும். அதனால்,அடிக்கடி கோயிலுக்குச் செல்வதன் மூலம் பிரச்னையின் தீவிரத்தைக் குறைத்துக் கொள்ளலாம். படைத்தவன் தானே நம்மைப் பாதுகாக்க முடியும்! குருபலத்தால் ஆயுள்பலம் அதிகரிக்கும், இருப்பினும், ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை கொள்வது அவசியம். எட்டாம் இட குரு வாழ்வில் தடுமாற்றத்தை உருவாக்கும். பணப் பற்றாக்குறை உண்டாகும். கடன்விஷயத்திலும் உஷாராக இருப்பது அவசியம். சிக்கனத்தை கடைபிடித்தால் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம். குடும்பத்தில்சலசலப்புக்கு பஞ்சமிருக்காது. பேச்சில் மிகவும் கவனம் தேவை. நிதானம் இழந்து பேசுவதால் பிரச்னைக்கு உள்ளாகலாம், கவனம். சகோதரர்கள் உங்களிடம் உரிமை என்ற பெயரில் மோதுவார்கள். அவர்களிடம் அளவாக உறவு கொள்வது நல்லது. இயன்ற உதவிகளை அவர்களுக்கு மறுக்காமல் செய்வதன் மூலம் கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கலாம். முரட்டு தைரியம் அதிகரிக்கும். இது சில சிக்கல்களில்மாட்டி விடும். கவனம். தாயிடம் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி இணக்கம் அதிகரிக்கும். அவர்களின் தேவையை நிறைவேற்றி அன்புக்குரியவராகத் திகழ்வீர்கள். வீடு, வாகன வகையில் இருக்கிற வசதியைப் பயன்படுத்திக் கொள்வது போதுமானது. வீட்டில் பராமரிப்பு செலவு செய்ய நேரிடும்.குழந்தைகளின் கல்வி, ஆரோக்கிய விஷயங்களில் அதிருப்திக்கு ஆளாவீர்கள். விழிப்புடன் இருந்து அவர்களை நல்வழிப்படுத்துவது நல்லது. அதிக அலைச்சல் இருக்கும். உங்கள் உடல்நிலை சீராக இருக்காது. உஷ்ண வியாதிகளால் அவதிப்படலாம். திருமணம் போன்ற சுபவிஷயத்தில் தடைகள் குறுக்கிடும். உறவினர்களின் ஒத்துழைப்பும் கிடைப்பது சந்தேகம் தான். கணவன், மனைவி கருத்துவேறுபாடு கொள்வர். விட்டுக்கொடுக்கும் மனோபாவம் குறையும். குடும்ப உறுப்பினர்கள் சிலரே பிரித்தாளும் தந்திரத்தை செய்து கொண்டிருப்பர். உஷார்.நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாற வாய்ப்புண்டு. அந்தரங்கப் பணிகளை, உங்களின் நேரடி கண்காணிப்பில் மேற்கொள்வதன் மூலம் பிரச்னையைத் தவிர்க்கலாம். தந்தையின் உடல்நலனில் கவனம் வேண்டும். அவருடன் கருத்துவேறுபாடு கொள்ளும் சூழ்நிலையும் இருக்கிறது. பூர்வீகச் சொத்தின் மூலம் பிரச்னைக்கு உள்ளாவீர்கள்.

தொழிலதிபர்கள்: உற்பத்தி மிக சுமாராகவே இருக்கும். லாபம் எதிர்பார்த்த அளவு இருக்காது. பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் குளறுபடி ஏற்படலாம். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். தொழில் கருவிகளை மாற்றியமைத்து உற்பத்தியைப் பெருக்கும் திட்டம் சிரமத்தின் பேரில் நிறைவேறும். தொழிற்சாலை இடவசதியை அதிகரிப்பீர்கள். பண வரவு செலவில் நேரடி கண்காணிப்பு நல்லது.

வியாபாரிகள்: சந்தையில் போட்டி அதிகரிப்பதால் விற்பனை இலக்கை அடைவதில் பின்தங்குகிற நிலை ஏற்படும். பொருட்களின் தரம் உயர்வாகவும், அளவான லாபத்திற்கு விற்பதன் மூலமும், வியாபாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம். நிர்வாகச் செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களை பயனறிந்து மேற்கொள்வதால் பணம் மிச்சமாவதுடன், உடல்நலமும் பாதுகாக்கப்படும். வியாபார அபிவிருத்திக்காக எதிர்பார்க்கிற நிதியுதவி கிடைக்கும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அதிக பணிச்சுமையை எதிர்கொள்கிற நிலை உண்டு. சோம்பல் குணம் மேலோங்கும் என்பதால், மனஉறுதியுடன் அன்றைய பணியை அன்றே முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இல்லாதபட்சத்தில் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரும். சிலர் நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். சலுகைகள் அதிகம் இராது. எனவே, குடும்பத் தேவைகளுக்காக அலுவலகத்தில் கடன் வாங்க நேரும். சக பணியாளர்களுடன் சுமூக நட்பு இருக்கும். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படலாம்.

பெண்கள்: குடும்பப்பெண்கள் கணவருடன் அனுசரித்து நடக்க வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயல்படுவர். நல்லோரின் அன்பு, ஆசி கிடைத்து மனதில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை பிறக்கும். வீட்டுச்செலவுக்கு தட்டுப்பாடு இருக்கும் என்பதால், சிக்கன செலவு செய்து சிரமம் அணுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தாய்வீட்டு உதவி கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை மதித்து நடப்பதால் மட்டுமே பணியில் குளறுபடி, ஒழுங்கு நடவடிக்கை வராமல் தவிர்க்கலாம். சலுகைகள் குறைவே. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனம் இட்டால் போதும். கடுமையாக உழைத்தால் தான் உற்பத்தி, விற்பனையை காத்துக் கொள்ள முடியும்.

மாணவர்கள்: உடல்நலத்தை நல்லமுறையில் பராமரித்துக்கொள்வதால் மட்டுமே படிப்பில் கவனம் ஏற்படும். படிப்புக்கான பணவசதி குறைந்த அளவில் கிடைக்கும். சிலர், பகுதிநேர வேலை பார்த்து படிப்புக்கான பணச்செலவை ஈடுகட்ட முயற்சிப்பர். சக மாணவர்களிடம் கருத்துபேதம் வராத சுமூக சூழ்நிலை இருக்கும். பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு குறை ஏற்படாமல் படிப்பில் அதிக கவனம் கொள்வது நல்லது. வண்டியை வேகமாக ஓட்டுவது கூடாது.

அரசியல்வாதிகள்: செயல்கள் நிறைவேறுவதற்குள் பலவித சோதனை, எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டியிருக்கும். நம்பிக்கையுடன் நடந்துகொள்வதால் மட்டுமே நன்மை கிடைக்கும். அரசியல் பணிக்கு புத்திரர்களின் உதவி ஊக்கம் தரும். ஆதரவாளர்களின் நம்பிக்கையை பெறுவது அவ்வளவு எளிதல்ல. எதிரிகளுக்கு பாடம் புகட்ட வேண்டுமென செயல்பட்டால் நேரமும் பணமுமே விரயமாகும். கடன் கொடுத்த பணம் வசூலாகும். வாகன வசதிபெற வழியுண்டு.

விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான இடுபொருட்கள் கிடைப்பதில் தாமதமும் பணப்பற்றாக்குறையும் ஏற்படும். அளவான மகசூல், அதற்கேற்ப பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் நல்ல வருமானமும் பெறுவீர்கள். நிலம் தொடர்பான பிரச்னை இழுத்தடிக்கும்.

பரிகாரம்: முருகப்பெருமானை வணங்குவதால் பிரச்னைகளின் தீவிரம் குறைந்து விடும்.

பரிகாரப் பாடல்:
அன்பர்கள் நேயா! அம்பிகை புதல்வா!
துன்பம் அகற்றிடும் சீலா பாலா!
சிவகுமாரா முருகா வருக!
பரமா! புருஷா! வரம் தர வருக!
கலங்காது எனையே காத்திட வருக!
காவாய் முருகா கார்த்திகை குமரா!
வா வா முருகா! வல்லமை தரவே.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar