காரைக்கால்: உலக நன்மை வேண்டி, திருவாரூர் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் குரு பகவானுக்கு மகா யாகம் நடந்தது.திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் குருபகவான் ராசி மண்டல குருவாக அருள்பாலித்து வருகிறார். குருபெயர்ச்சியையொட்டி, இக்கோவிலில், உலக நன்மை வேண்டி 9ம் ஆண்டு மகா யாகம் நடந்தது.நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு துவங்கி, 11:00 வரை யாகம் நடந்தது. மேஷ ராசி முதல் மீன ராசி வரையிலும், அஸ்வதி நட்சத்திரம் முதல் ரேவதி நட்சத்திரம் வரை உள்ள 27 நட்சத்திரத்தில் பிறந்த அனைவரும் நன்மை பெற பிரார்த்தனை நடந்தது.பின், மகா பூர்ணாஹூதி, குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.அகில இந்திய ஆசிசைவ சிவாச்சாரியர் சேவா சங்க துணைத் தலைவர் ராஜாசுவாமிநாத சிவாச்சாரியர் தலைமையில் கோவில் குருக்கள் ராஜா மற்றும் குமார் குருக்கள் ஆகியோர் யாகம் நடத்தினர்.பக்தர்கள் திரளாக கொண்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை பூந்தோட்டம் ராசிமண்டல குருபகவான் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.