Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரவநல்லூர் கம்பளத்தம்மன் கோயிலில் ... ஈஸ்வரன் கோவிலில் யாகம் துவக்கம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரம்பரியமிக்க ஆழ்வார்திருநகரி கோயில் தெப்பக்குளத்தை அகற்ற பக்தர்கள் எதிர்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2013
10:05

பாரம்பரியமிக்க ஆழ்வார்திருநகரி ஆதிநாத ஆழ்வார் கோயில் தெப்பக்குளத்தை அகற்ற நடவடிக்கை எடுத்து வரும் மாவட்ட நிர்வாகத்திற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனார். தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாத ஆழ்வார் கோயிலுக்கு பாத்தியப்பட்ட தெப்பக்குளம் திருச்செந்தூர்- திருநெல்வேலி ரோட்டில் அமைந்துள்ளது. இந்த தெப்பக்குளம் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி மாவட்ட நிர்வாகம் அகற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக கோயில் நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது. அதில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தெப்பக்குளத்தை அகற்ற வேண்டும். இதுதொடர்பாக ஆட்சேபனை இருப்பின் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ., அலுவகத்தில் வரும் 7ம் தேதி நேரில் ஆஜராகி விளக்க கடிதத்துடன் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பக்தர்கள் எதிர்ப்பு: ஆழ்வார்திருநகரி ஆதிநாத ஆழ்வார் கோயில் மிகவும் பழமையான கோயிலாகும். இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலுக்கு பாத்திப்பட்ட தெப்பக்குளத்தை அகற்றுவது மிகவும் வேதனையளிப்பதாக பக்தர்கள் மனம் குமுறுகின்றனர். கோயிலில் மாசி மாதம் நடக்கும் திருவிழா மிகவும் சிறப்பானதாகும். அப்போது கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் இரண்டு நாள் தெப்பத்திருவிழா வெகு சிறப்பாக நடக்கும். தற்போது தெப்பக்குளத்தை அகற்றி விட்டால் தெப்பத்திருவிழா நடத்தப்படுவது தடைபடும். ஆண்டாண்டு காலமாக ஆழ்வார்திருநகரி கோயில் சார்பில் தெப்பத்திருவிழா திடீரென நிறுத்தப்பட்டால், கடவுள் குற்றமாகி விடாதா என்றும் பக்தர்கள் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். போக்குவரத்திற்காக ரோட்டை அகலப்படுத்துவதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. அதை விட்டு விட்டு பக்தர்கள் மனம் நோகச்செய்யும் வகையில் தெப்பக்குளத்தை அகற்றும் மாவட்ட நிர்வாகத்தின் முடிவுக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் முடிவை மாற்றாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர். -நமது சிறப்பு நிருபர்-

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 
temple news
மரக்காணம்: மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முன்னுார் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பில், ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஐந்து பேட்டரி வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar