Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அரசுக்கு ஆபத்து! பூஜைகள் என்னென்ன!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கொஞ்சும் நிலவும் குளிர்ந்த வானும் கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2013
05:06

*மனிதனுக்கு எல்லாம் கிடைத்தாலும் ஒன்று மட்டும் கிடைப்பதில்லை. அது தான் மனநிம்மதி. இது கிடைத்து விட்டால் எல்லாம் கிடைத்த சந்தோஷம் நம்மிடம் வந்து விடும். கடவுளை வணங்குவதால் மனமும், உடலும் தூய்மை பெறுகிறது. வலிமையும், புத்துணர்ச்சியும், நிம்மதியும் நம்முள் உண்டாகிறது.
*மண்வெட்டியால் தோண்டுபவனிடமும், கல் உடைக்கும் தொழிலாளியிடமும் கடவுள் இருக்கிறார். காயும் வெயிலிலும், நனையும் மழையிலும் கடவுள் இவர்களோடு ஐக்கியமாகிறார்.
*கடவுள் இன்னும் மனிதர்களிடம் நம்பிக்கையை இழக்கவில்லை. ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் இதைத் தான் உணர்த்துகிறது.
*இன்ப துன்பம் உலகில் தவிர்க்க முடியாது. இரண்டையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை கடவுளிடம் யாசிப்போம். நம் மனதை கொஞ்சும் நிலவாகவும், குளிர்ந்த வானமாகவும் மாற்றிக்கொள்ளும் பொறுப்பு நம்மிடம் தான் இருக்கிறது.
*பொருள் கிடைத்தும் சிலருக்கு ஆசை அடங்குவதில்லை. அப்போது ஆசை, செயல் இரண்டுமே நிறைவேறாமல் போய்விடும்.
*உண்மையான மகிழ்ச்சி நாம் சம்பாதிக்கும் பணத்தில் இல்லை. அதில் எவ்வளவு தர்மங்களைச் செய்கிறோம் என்பதில் அடங்கியிருக்கிறது.
*செயலற்றநிலை (சோம்பேறித்தனம்) என்பது நரகத்தில் மனிதனைத் தள்ளிவிடும். கடுமையான உழைப்பே மேலானதாகும்.
*நாம் அனைவரும் ஒன்றைச் செய்யத் தவறுவதில்லை. நம்மை விட்டு விட்டு வேறு யாரையாவது சீர்திருத்த விரும்புகிறோம்.
*உலகத்தை தவறாகப் புரிந்து கொண்டு விட்டு, அது நம்மை ஏமாற்றுகிறதே என்று சொல்லித் திரிகிறோம்.
*சொல்லுகின்ற விஷயத்தை நீண்ட கதையாகச் சொல்லத் தேவையில்லை. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதே அறிவுடையவர்களின் செயல்.
*தகுதியுடன் வாழ வேலை செய்ய வேண்டும். வேலை செய்ய வேண்டுமானால் வாழ வேண்டும். இப்படியாக வாழ்வும், தொழிலும் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது.
*சுயபுத்தியில்லாத மனிதன் வாழ்வில் என்றும் ஒளியைக் காணமுடிவதில்லை. தன்னம்பிக்கை இருந்தால் சுயபுத்தி தானாக வந்துவிடும்.
*நியாயமான எண்ணம் கைகூடவில்லையே என வருந்த வேண்டாம். அரும்பு ஒருநாள் மலராவது போல, நல்ல எண்ணம் ஒருநாள் செயலாக மலர்ந்து பலனளிக்கும்.
*இருளில் இருந்து வெளியே புறப்பட்டு வாருங்கள். உளப்பூர்வமாக அனைவர் மீதும் அன்பு காட்டுங்கள். அழுக்கடைந்த ஆடை உடுத்தும் தொழிலாளியிடமும் கடவுளைத் தரிசியுங்கள்.
*உலகம் அனைத்தையும் ஆள்பவர் கடவுள் என்ற உண்மையை உணராதபோது, அகம்பாவம் ஒருவரின் மனதில் தலைதூக்குகிறது.
*மனிதன் தனக்குரிய கடமையை மறந்து கடவுளை அடைவதாகச் சொல்லி தனித்து ஒதுங்கி வாழ்வது தன்னையே ஏமாற்றிக் கொள்வதாகும்.
*கோயிலுக்குச் சென்று தூபதீபம் காட்டுவதை விட, உழைப்பது உயர்ந்தது. உழைப்பாளியின் வியர்வையில் கடவுள் மூழ்கியிருக்கிறார்.
-ரவீந்திரநாத் தாகூர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar