Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில் போக நேரமில்லையா? இதையாவது ... உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் பத்மநாபபுரம் அரண்மனையை இணைக்க முயற்சி! உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண்கள் நுழையாத கருப்பசாமி கோவில்: நீர் வற்றியதால் வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2013
10:06

மேட்டூர்: மேட்டூர் அணைக்குள், மூழ்கியிருந்த கருப்பசாமி கோவில், தற்போது, வெளியே தெரிகிறது. இந்த கோவிலில், சிலையை தேடுவதற்காக, மண்ணை தோண்டிய போது, ஆங்கிலேயர் கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேட்டூர் தாலுகா, கீரைக்காரனூர் கிராமம், மேட்டூர் அணை கரையோரம் அமைந்துள்ளது. மேட்டூர் அணை கட்டும் முன், பொதுமக்கள், அப்பகுதில் கருப்பசாமிக்கு, சிலை வைத்து வழிபாடு செய்தனர். 1934 ல், மேட்டூர் அணை கட்டிய பின், கருப்பசாமி கோவில், நீர்பரப்பு பகுதிக்குள் மூழ்கியது. அணை நீர்மட்டம், 100 அடியை எட்டும் போது, கருப்பசாமி கோவில், நீரில் மூழ்கி விடும். அணை நீர்மட்டம், 16.800 அடியாக சரிந்ததால், நீரில் மூழ்கியிருந்த கருப்பசாமி கோவிலை, கீரைக்காரனூர் பக்தர்கள், சீரமைத்து வழிபாடு செய்தார். கருப்பசாமி சிலை அருகே, நிலத்தில் வேறு சிலைகள் இருக்க கூடும் என்பதால், அந்த இடத்தை, பக்தர்கள் தோண்டினர். மண்ணுக்குள், 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது, தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த, விக்டோரியா மகாராணி உருவம் பதித்த அணா, அரையணா, காலணா நாணயங்கள் கிடைத்தன. மொத்தம், 23 நாணயங்களை எடுத்த பக்தர்கள், பூசாரி மாணிக்கத்திடம், அவற்றை ஒப்படைத்தனர். "19ம் நூற்றாண்டில், கீரைக்காரனூர் பகுதியில், திருஷ்டி கழிப்பதற்காக, காசுகளை தலையை சுற்றி, கோவிலில் வீசுவதை வழக்கமாக வைத்திருந்தனர். அந்த காசுகள்தான் தற்போது மண்ணில் இருந்து கிடைத்துள்ளன என, பக்தர்கள் தெரிவித்தனர். பொட்டனேரி வருவாய் ஆய்வாளர் செல்லத்துரை, கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் ஆகியோர், கோவிலை பார்வையிட்டு, மாணிக்கத்திடம் இருந்த காசுகளை மீட்டு, தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அந்த காசுகள், அரசு கருவூலத்தில் சேர்க்கப்படும் என, வருவாய்துறையினர் தெரிவித்தனர். பழங்கால காசு கண்டெடுக்கப்பட்ட கருப்பசாமி கோவிலுக்குள், ஆண்கள் மட்டுமே சென்று, வழிபட வேண்டும் என்ற கட்டுப்பாடு, இன்னமும் உள்ளது. இதனால், பெண் பக்தர்கள் கோவிலுக்கு வெளியில் நின்று, கருப்பசாமியை, வழிபட்டு திரும்புகினறனர்.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 
temple news
கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ரலிங்கேஸ்வரர் கோயிலில் நடந்த மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar