Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மக்களின் மனதில் நிற்பவர் யார்? குழந்தையின் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெரியவர்களை நிந்திக்காதீர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2013
03:06

*கடவுளை நேசிப்பது என்றால் வேறு ஏதும் அல்ல! உலகிலுள்ள அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவதே கடவுளை நேசிப்பதாகும்.
*நட்ட விதை மண்ணில் முளைத்து வேர்விடுவது போல, மனிதனுக்கு நல்லது நடக்கவும் ஒரு நேரம் வரத்தான் செய்யும். எல்லாருக்கும் இது பொருந்தும்.
*விண்ணில் இருக்கும் கடவுளை நம்புகிறீர்களோ இல்லையோ தெரியாது. ஆனால், தன்னம்பிக்கை என்பது எல்லாருக்கும் அவசியமானது.
*தன்னம்பிக்கை இருந்துவிட்டால் எல்லாம் உங்களிடம் இருக்கிறது. அது இல்லாவிட்டால் என்ன இருந்தாலும் ஒருபயனும் உண்டாகாது. எறும்பைப் பாருங்கள். அது கூட நம்பிக்கையோடு தன் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.
*இரண்யகசிபுவிடம் சீறிப்பாயும் நரசிம்மனே, பிரகலாதனிடம் சாந்தகுணம் கொண்டு அருளைப் பொழிகிறார். ஒரே கடவுளே அன்பு, கோரவடிவம் என இருவேறு நிலைகளில், அவரவர் குணத்திற்கேற்ப செயல்படுகிறார்.
*கடவுளின் கோபத்தைக் கூட சமயத்தில் மாற்றி விடலாம். ஆனால், பெரியவர்களை நிந்திப்பதால் உண்டாகும் பாவத்தைப் போக்க கடவுள் கூட துணை நிற்பதில்லை.
*கடவுள் இல்லவே இல்லை என்று சொல்வதும், எனக்கு நாக்கு இல்லை என்று சொல்வதும் ஒன்று தான்.
*தான் என்ற அகங்கார எண்ணமும், சுயநலமும் கொண்ட மனிதர்களைக் கண்டதும், கடவுள் ஆயிரம் அடி விலகி ஓடி விடுவார்.
*பள்ளத்தில் விழுவதற்கு ஒரு நிமிட நேரம் போதும். ஆனால், மேலேறி வருவதற்கு பொறுமையும், சிரமமும் தேவைப்படும். அதுபோல ஆக்குவதற்கு முயற்சி அதிகம் தேவைப்படுகிறது.
*எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று வேதாந்தம் பேசிக் கொண்டு பொழுதைக் கழிப்பவர்கள் சோம்பேறிகள். ஒரு செயலை சிறப்பாகவும், விவேகமாகவும் செய்யவேண்டும் என்பதற்காகவே கடவுள் நமக்கு அறிவைக் கொடுத்திருக்கிறார்.
*இன்றைய நண்பன் நாளை எதிரியாகலாம். ஆனால், நம்பிக்கைக்குரிய மாறாத ஒரே உற்ற நண்பனாக கடவுள் மட்டுமே விளங்குவார்.
*பிறரை வணங்குவது என்பது பலவீனம் ஆகாது. புல்லையும் ஒரு பொருட்டாக மதித்து வணங்கும் பெருந்தன்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
*தன்னை வெட்டுபவனுக்கும் நிழல் தரும் மரத்தைப் போல, தன்னைத் துன்புறுத்தும் கொடியவனுக்காகவும் பிரார்த்தனை  செய்பவனே ஆன்மிகவாதி.
*துயரத்தால் மனம் வருந்தும்போது, பிறரிடம் உங்கள் @வதனையை சொல்லாதீர்கள்.இஷ்டதெய்வத்திடம் முறையிடுங்கள்.
-அமிர்தானந்தமயி

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar