Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கையை காட்டினா போதும்! புண்ணியம் தேடி ... பழநியில் மட்டும் அதிக கூட்டம் ஏன்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2013
04:06

தினமும் தூங்கச் செல்லும் முன் தூக்கத்துக்கு அதிபதியான நித்ராதேவியிடம், துயிலே! அமைதியான துயிலே! நித்ரா சக்தியே! நீயே இயற்கையின் மென்மையான தாதி. புத்துணர்ச்சியளிக்கும் இனிய மருந்து. துன்பம், வலி, அல்லல் அனைத்திலும் என்னை அமைதிப்படுத்தும் அருமருந்து, பிரமனிடத்திலே என்னை இட்டுச்செல். பேரின்பத்திலே என்னை முழுக்காட்டு. எனது நாடி, நரம்பு, மூளையை வலுப்படுத்தி புதிய வலிமை தா. துயில் வடிவ நித்ராதேவியே! உனக்கு எனது வணக்கம், என்று சொல்லிவிட்டு படுங்கள். சுகமாக உறங்குவீர்கள்.

தூக்கம் இயற்கையின் அருமருந்து. நல்ல தூக்கத்தால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கிறது. களைப்பை நீக்கி, இழந்த சக்தியை ஈடுசெய்ய மனதுக்கும், உடலுக்கும் உள்ள சக்தியைப் பொறுத்ததே தூக்கத்தின் காலஅளவு. போதிய தூக்கமில்லாவிட்டால், திறமையில்லாமல் போகும்.

எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை வயது, மனோநிலை, செய்யும் வேலையின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து அமையும். ஒரு மூதுரையின் படி ஆணுக்கு ஆறுமணி நேரமும், பெண்ணுக்கு ஏழுமணி நேரமும் தூக்கம் தேவை. குழந்தைகளுக்கு பத்துமணி நேர தூக்கம் வேண்டும். முட்டாளுக்கு எட்டுமணி நேர தூக்கம் தேவை. அவனது மூளை வளர்ச்சிக்கு இது அவசியம். விவசாயம், வண்டி இழுத்தல், சுமை தூக்குதல் உள்ளிட்ட கடும் உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு எட்டு மணி நேர தூக்கம் தேவை.

பொதுவாக, இரவு பத்து மணிக்கு படித்து நான்கு மணிக்கு எழ வேண்டும். சீக்கிரம் தூங்கி, சீக்கிரம் எழும் ஒருவனுக்கு உடல்நலம், செல்வம்,
ஞானம் ஆகியவற்றைத் தரும். அதிகத்தூக்கம் ஒருவனை மந்தமாகவும், சோம்பேறியாகவும் ஆக்கிவிடும். பெரும்தூக்கம் விரைவில் உடலை
சீரழித்து, புத்திக் கூர்மையையும் குறைத்து விடும்.

தூக்கத்திற்காக போதை மருந்துகளைச் சாப்பிடாதே. ஜன்னல் கதவுகளைத் திறந்து வை. பிராணவாயுவை அதிகமாக உட்கொள்வதால் மறுநாள் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இயல்பாகத் தூங்க முடியாவிட்டால், பதினைந்து நிமிடங்கள் தெளிந்த மனதோடு சுறுசுறுப்பாக நட. பிறகு படுத்தால் உடனே நல்ல தூக்கம் வரும்.  பக்கவாட்டில் படுப்பது நல்லது. அதிலும் இடது பக்கமாகப் படுத்தால் சூர்யநாடி அல்லது பிங்களநாடி செயல்படும். சாப்பிட்டது எளிதில் ஜீரணமாகும். தூக்கம் நன்றாக வரும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar