Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்காலில் மாங்கனி திருவிழா ... மழை வேண்டி மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் வருண யாகம் மழை வேண்டி மதுரை தெப்பக்குளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழைக்காக வினோத பிரார்த்தனை: வருண பகவானின் உருவ பொம்மை எரிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2013
10:06

காஞ்சிபுரம்: பெரும்பாக்கம் கிராம மக்கள், மழை வேண்டி, வருண பகவானின் உருவ பொம்மைக்கு இறுதி சடங்கு செய்தனர். காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. பருவ மழை இல்லாததால், ஏரி பாசனத்தை நம்பி இருந்த விளை நிலங்கள், வறண்டு கிடக்கிறது. பம்பு செட் பாசனம் மூலம் பயிரிடப்பட்ட, நெற்பயிர்கள் தற்போது நிலத்தடிநீர் குறைந்து போனதால், கதிர்விடும் நேரத்தில் கருகி போனது.

இறுதி சடங்கு: இதனால், செய்வதறியாமல் தவிர்த்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள், நேற்று உச்சிவெயிலில் ஒன்றுகூடி, வருண பகவான் உருவ பொம்மைக்கு பாடை கட்டி, இறுதி சடங்கு செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, மாரியம்மன் கோவில் தெருவில், வருண பகவானின் உருவ பொம்மை செய்து, அதை கட்டிலில் படுக்க வைத்தனர். பின், மாலை அணிவித்து கிராம மக்கள், "பாவி வானம் இடிந்து விழ வேண்டும் என, ஒப்பாரியில் ஈடுப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாடை கட்டி, மாட்டு வண்டியில் உருவ பொம்மையை ஏற்றிக் கொண்டு, மேள தாளத்துடன் அனைத்து தெருக்கள் வழியாக, ஊர்வலமாக எடுத்து சென்றனர். முறைப்படி கொள்ளி சட்டியும் எடுத்து செல்லப்பட்டது. ராகு காலத்திற்கு முன்னதாக, மாலை 4:00 மணிக்கு, சுடுகாட்டிற்கு சென்று தீயிட்டு இறுதி சடங்கை செய்தனர். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். எட்டாம் நாளான வரும் ஞாயிற்றுக் கிழமை, வருண பகவானுக்கு காரியம் செய்ய கிராம மக்களால் முடிவு செய்யப்பட்டது.

ஐதீகம்: சுடுகாட்டிற்கு பிணத்தை எடுத்து செல்லும் இதுபோன்ற சடங்கை நிறைவேற்றினால், ஓரிரு தினங்களில் மழை பெய்யும் என, பெரும்பாக்கம் கிராம மக்களின் ஐதீகமாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், இதேபோல் சடங்கு நடத்தப்பட்டது, அப்போது இரண்டாவது நாளில் மழை பெய்தது என, கிராம மக்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar