Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோபிநாதசுவாமி கோயில் பகுதியை ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதி அம்மன் கோவில் திருவிழா: பீமன் படுகளத்தில் துரியோதனன் வதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2013
10:06

வடகுப்பம்: திரவுபதி அம்மன் சமேத தர்மராஜா சுவாமி கோவில் பிரம்மோற்சவ திருவிழாவில், பீமன் படுகளத்தில், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிப்பட்டு அடுத்த, வடகுப்பம் ஊராட்சியில் அடங்கியது முனுசாமி நாயுடு கண்டிகை, சாமி நாயுடு கண்டிகை, வடகுப்பம், கொல்லப்பள்ளி கிராமங்கள். இந்த நான்கு கிராமங்களுக்கு, பொதுவான திரவுபதி அம்மன் கோவில் கொல்லப்பள்ளி அருகே அமைந்துள்ளது. இந்த கோவிலின் பிரம்மோற்சவ திருவிழா, ஆறு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு, திருவிழா நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு, ஒரு சிலர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததால், வருவாய் துறையினர் தலையிட்டு சமாதானம் செய்த பிறகு, திருவிழா நடந்தது. இம்மாதம், 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, 16ம் தேதி பகாசூரன் வதம், 17ம் தேதி ராட்சத யாகம், திரவுபதி சுயம்வரம் மற்றும் அம்மன் திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடந்தது. இறுதி நாளான நேற்று முன்தினம் காலை, 11:00 மணி அளவில், பீமன் படுகளத்தில், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சியை தெருக்கூத்து கலைஞர்கள் தத்ரூபமாக நடித்துக் காண்பித்தனர். இதற்காக, கோவில் வளாகத்தில், களிமண்ணால் செய்யப்பட்ட, பிரமாண்ட சிலை வடிவங்கள் செய்து, அதைச் சுற்றி பொதுமக்கள் பார்த்து ரசிக்கும்படி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அன்றைய தினம் மாலை, 7:00 மணியளவில், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து, தீ மிதித்தனர். அடுத்ததாக, இரவு, 10:00 மணியளவில், அர்ஜூனன் திரவுபதி அம்மன் உற்சவர் மலர் அலங்காரத்தில், மங்கள வாத்தியங்கள் இசைக்க வாண வேடிக்கையுடன், திருவீதிஉலா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு, தினமும் பகல், 2:00 மணியளவில் மகாபாரத சொற்பொழிவும், இரவு, 10:00 மணிக்கு தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar