நாகப்பட்டினம்: நாகை, அந்தோணியார் ஆலய பெரிய சப்பர பவனியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகை, அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழா கடந்த, 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் திருப்பலி, செபமாலை, மறையுரை மற்றும் தேர்பவனி நடந்தது. நேற்று முன்தினம் இரவு, கூட்டு பாடல் திருப்பலிக்குப் பின், பெரிய சப்பர பவனி நடந்தது. மறை மாவட்ட முதன்மை பாதிரியார் செல்வன் செபாஸ்டின் மற்றும் உதவி பாதிரியார்கள் பெரிய சப்பரத்தை புனிதம் செய்து, பவனியை துவக்கி வைத்தனர். அலங்கரிக்கப்பட்ட பெரிய சப்பரத்தில், புனித லூர்து மாதா மற்றும் அந்தோணியார் வலம் வந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.