Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை கோவிலில் தட்ஷணாயன கால ... குருஷேத்திராவில் ஏழுமலையான் கோவில்! குருஷேத்திராவில் ஏழுமலையான் கோவில்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி நூதன வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2013
10:07

திருப்பூர்: மங்கலம் பெரியபுத்தூரில், வறட்சி நிலை மாறி, மழை பொழிய வேண்டும், என, அப்பகுதி பெண்கள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர். கடும் வறட்சியால் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கடவுளுக்கு உணர்த்தும் வகையில், பெண்கள் ஒன்று கூடி, சிறுமிக்கு மாலை அணிவித்து மண் கலயத்தை கையில் கொடுத்தனர்; பெண்களும் மண் கலயம் ஏந்தி, வீடு, வீடாக சென்று, பழைய சோறு மற்றும் சின்ன வெங்காயம் பெற்றனர்.பின், அவற்றை விநாயகர் கோவிலுக்கு எடுத்துச்சென்று, ஒன்றாக கலந்து, அனைவரும் பழைய சோறு சாப்பிட்டனர். வருண பகவான், கருணை காட்டாததால், ஊரை காலி செய்வதாக கூறி, கூடை, முறம் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு, ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள, நொய்யல் ஆற்றுக்கு சென்றனர்.பெரியவர்கள் சிலர், "மழை பொழியும், விநாயகரை வணங்குவோம், என கூறி, பெண்களை திரும்ப அழைத்து வந்தனர். ஊருக்குள் வந்த பொதுமக்கள், விநாயகர் கோவில் கருவறை, நிலவு பகுதியில் மண் மூட்டைகளை அடுக்கி, 108 குடம் தண்ணீர் ஊற்றினர். பொங்கல் வைத்து, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். பழங்காலத்தில் மழை வேண்டி, முன்னோர் இவ்வாறு வழிபட்டதால், அதே நூதன முறையை பின்பற்றி வழிபட்டதாக, பெண்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தில்லையாடி மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar