பதிவு செய்த நாள்
08
ஜூலை
2013
10:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தட்ஷணாயன புண்ணிய கால கொடியேற்றம் நடந்தது.திருவண்ணாமலை கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம், ஆடிப்பூரம், தட்ஷணாயன புண்ணியகால பிரம்மோற்சவம் (ஆனி பிரம்மோற்சவம்), உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவம், கார்த்திகை தீப திருவிழாக்களின் போது கோவிலில் கொடியேற்றப்படும்.இந்த ஆண்டு, தட்சணாயன புண்ணியாகால பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன், நேற்று துவங்கியது. இதையொட்டி, அதிகாலை நடை திறக்கப்பட்டது. அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து விநாயகர், சந்திரசேகரர், அம்மன் ஸ்வாõமிகள் தங்கக்கொடி மரம் அருகே, அலங்காரத்தில் எழுந்தருளினார். பின், சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத, மேளதாளம் அதிர்வேட்டு முழங்க காலை, 7.10 மணிக்கு அண்ணாமலையார் சன்னதி முன் உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடி ஏற்றினர். அப்போது, திரளான பக்தர்கள் வணங்கினர்.தொடர்ந்து, பத்து நாட்கள் நடக்கும் விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.