பதிவு செய்த நாள்
09
ஜூலை
2013
11:07
பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் பார்வதிஅம்மன், சுடலைமாடசுவாமி, சப்பாணி மாடசுவாமி ஆகிய கோயில்களில் கும்பாபிஷேகம் வரும் 10ம் தேதி நடக்கிறது. முதல் நாள் காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், காப்பு கட்டுதல், இரவு மனோ 8 மணிக்கு புண்ணியஸ்தானம், வாஸ்துசாந்தி, காலபைரவர், ஈசன பூஜை, இரவு 12 மணிக்கு பீட பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், யந்திரஸ்தாபிதம், சக்தி நிறுத்துதல், தேவதை காப்பு கட்டுதல் நடக்கிறது. 2ம் நாள் காலை 5 மணிக்கு அம்மன் சர்வதேவதைகள், சங்கோஜம், கலாகாசனம், கும்பம் எழுந்தருளல், காலை 6 மணிக்கு கும்பாபிஷேகம் தொடர்ந்து 9 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், பகல் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.